எண்ணக்குவியல்களுக்கிடையே
கனவுப் போர்வை விலக்கி
காதோரம் உன்
சிணுங்கல்கள் உரச ...
முகம் கழுவி
கண்ணாடியில் உன் முகம்
தேடித் தேடி
தோற்றுப் போனேன் ...
கனவல்லவே
நிஜம் உணர்த்தியது
வழியனுப்ப வந்தவளை
கதவிடுக்கில்
வளைக்கரம் பிடித்திழுத்து
நீ தந்து போன முத்தத்தின் ஈரம் ....!